நானுஓயா பிரதான வீதியில் நேற்று (22.07) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் சிறுவன் ஒருவன் காயமடைந்துள்ளார்.
தலவாக்கலையிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற கார் ஒன்று நானுஓயா பிரதான நகரில் வீதியிலுள்ள எல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மற்றும் முச்சக்கரவண்டி என்பவற்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் குறித்த லொறியும் முச்சக்கரவண்டியும் சேதமடைந்துள்ளன.
இச்சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.