வவுனியாவில் புகையிரதத்துடன் பாரவூர்தி மோதி விபத்து!

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் இன்று (23.07) மாலை இடம்பெற்ற தொடரூந்து விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், பாரவூர்தியும் சேதமடைந்தது.

யாழில் இருந்து கொழும்பு நொக்கிச்சென்ற கடுகதி தொடரூந்துடன் திருநாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போது பாரவூர்தியடன் மோதியுள்ளது.

விபத்தில் பாரவூர்தியின் சாரதி படுகாயமடைந்துள்ளதுடன்,மற்றொருநபர் சிறுகாயங்களிற்குள்ளாகியநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக வவுனியா போக்குவரத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்

வவுனியாவில் புகையிரதத்துடன்  பாரவூர்தி மோதி விபத்து!

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version