இலங்கை தமிழர், தமிழ் நாட்டில் சாதனை சைக்கிள் பயணம்

இலங்கை தமிழரான பிரதாபன் என்பவர் இந்தியா தமிழ் நாட்டில் 3000 கிலோ மீட்டர் தூரத்தினை 40 நாட்களில் சைக்கிளில் சுற்றி சாதனை படைக்கும் நோக்கில் இன்று(23.07) தனது பயணத்தை சென்னை, மெரீனா கடற்கற்கரையில் காலை 8.30 இற்கு ஆரம்பித்துள்ளார்.

“மரங்கள் எங்கள் உயிர். மரம் வளர்ப்போம். இயற்கையை காப்போம்” எனும் பதாதையை சைக்கிளில் தாங்கிய வண்ணம் தனது இந்தப் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்த பயணத்தில் தமிழ் நாட்டின் 38 மாவட்டங்கலூடாக பிரதாபன் பயணிக்கவுள்ளார்.

இலங்கை தமிழர், தமிழ் நாட்டில் சாதனை சைக்கிள் பயணம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version