குழந்தைகளுக்கு ஸ்மார்ட் தொலைப்பேசிகளை கொடுப்பதால் ஏற்படும் விளைவுகள்!

தற்போதைய காலத்தில் குழந்தைகள் அழுதாலும் சரி அல்லது அவர்கள் குழப்படி செய்யாமல் இருப்பதற்கும் சரி ஸ்மார்ட் தொலைப்பேசிகளை கொடுத்துவிடுகிறோம். அவர்களும் தொலைப்பேசிக்காகவே அடம்பிடிப்பதும் உண்டு.

இப்போது இளைஞர்கள் மத்தியில் மட்டுமில்லாமல், குழந்தைகளின் மத்திலும் கூட ஸ்மார்ட தொலைப்பேசிகளின் பாவனை அதிகமாகவே உள்ளது.

இதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் நீண்டகாலத்திற்க இருக்கும். அப்படி என்ன என்ன பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஸ்மார்ட் ஃபோன் பாவனையால் அதிகம் பாதிக்கப்படுவது கண்தான். ஃபோன் திரைகளில் இருக்கும் ஒளி இலகுவாக கண்களில் ஊடுறுவும்.

இதன் மூலம் கண்களில் நீர் கசிவது, தலைவலி,   சிவந்த கண்,   கண் உறுத்தல் என பல்வேறு விதமான பாதிப்புகள் அடிக்கடி ஏற்படுகிறது.

இது போன்ற சூழ்நிலைகளிலிருந்து தப்பிப்பதற்காகக் குழந்தைகளை அடிக்கடி கண்காணித்து ஸ்மார்ட்போன் பயன்பாடுகளின் நேரத்தைக் குறைக்க வேண்டும்.

மேலும் வருடாந்திர பரிசோதனைக்கும் அழைத்துச் சென்று பெண்களின் சோதனை செய்து பார்க்க வேண்டும். மேலும் திரையை பார்க்கக்கூடிய கண்ணாடிகளை அணிவதும் கட்டாயமானது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version