குறைந்த விலையில் முட்டைகளை விற்பனை செய்ய நடவடிக்கை!

சதொச ஊடாக இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரத்தில் சதொச ஊடாக உரிய முட்டைகளை விற்பனை செய்ய எதிர்பார்ப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் சந்தையில் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை எனவும், முட்டையின் விலை அதிகரிப்பை கருத்திற் கொண்டு நுகர்வோருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்படி, சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாளாந்தம் சுமார் 100,000 முட்டைகள் சந்தைக்கு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர்  நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version