கொழும்பை முற்றுகையிட்ட தொழிற்சங்கங்கள்!

பொலிஸாரின் உத்தரவையும் மீறி கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று (25.07) முன்னெடுத்துள்ளனர்.

தொழிலாளர்களை அடிமையாக்கும் சட்டமூலத்தை மீளப்பெறு, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் விதவைகள் மற்றும் ஆதரவற்றோர் ஓய்வுதியம் கொள்ளையை நிறுத்து எஎன பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியே குறித்த ஆரப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனால் கொழும்பு புறக்கோட்டையின் லோட்டஸ் சுற்றுவட்ட வீதி சந்தியில் இருந்து காலி முகத்திடல் நுழைவு வீதி தடைப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

 இதேவேளை, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல தொழிற்சங்கங்கள் கொழும்பு கோட்டையின் பல வீதிகளுக்குள் பிரவேசிப்பதைத் தடுக்கும் வகையில் கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version