பம்பலப்பிட்டியில் துப்பாக்கி சூடு! (Update)

பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் மதுவரி திணைக்களத்தின் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பம்பலப்பிட்டி பகுதியில் இன்று (07.08) மாலை துப்பாக்கிப்பிரயோகம் ஒன்று நடைபெற்றுள்ளது.

வான் ஒன்றில் வந்த அடையாளந்தெரியாத குழுவொன்று கார் ஒன்றை இலக்கு வைத்து இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளது.

பம்பலப்பிட்டி மெரைன் ட்ரைவ் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மதுவரி திணைக்களத்தின் நான்கு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version