மருதானையில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்கும், பேஸ்லைன் வீதியில் அமைந்துள்ள பிரபல பாசாலைக்கும் இடையில் இன்று (07.08) இடம்பெற்ற காற்பந்தாட்ட போட்டியின் முடிவில் மாணவர் குழுக்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
வெள்ளவத்தை குரே மைதானத்தில் இன்று (07.08) மாலை இடம்பெற்ற இந்த மோதலில் 10 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஐவர் வெள்ளவத்தை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.