கிளிநொச்சியில் சிறுவர் அபிவிருத்தி குறித்து கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட சிறுவர் அபிவிருத்தி, பால் மற்றும் பால்நிலை வன்முறைக்கு எதிரான விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் இன்று(08.08) இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) நளாயினி இன்பராஜ், பச்சிலைப்பள்ளி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், கரைச்சி மற்றும் பூநகரி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர்கள், வலய கல்வி பணிமனை அதிகாரிகள், பிராந்திய சுகாதாதர சேவைகள் பணிப்பாளர் பணிமனை அதிகாரி, சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், துறைசார்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள், உளவள ஆற்றுப்படுத்துனர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்தி தொடர்பாக கடமை புரிகின்ற உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், துறைசார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, மாவட்ட ரீதியில் சிறுவர்கள் மற்றும் மகளீர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பாதுகாப்பு மற்றும் சிறுவர் அபிவிருத்தி தொடர்பாக விடயங்கள் துறைசார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் விரிவாக ஆராயப்பட்டன.

மேலும் பாடசாலை மாணவர்களின் வரவு ஒழுங்கின்மை மற்றும் இடைவிலகல், மாணவர்களின் மீளிணைப்பு செயற்பாடுகள், சுகாதாரம் மற்றும் உணவு, பிறப்புச் சான்றிதழ் தொடர்பான நடவடிக்கைகள், சிறுவர் கழக செயற்பாடுகள், கிராமிய சிறுவர் அபிவிருத்திக் குழு செயற்பாடுகள், தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இதனைவிட தனியார் கல்வி நிலையங்களின் அடிப்படை வசதிகள், சட்டவிரோத செயற்பாடுகள், போதைப்பொருள் ஒழிப்பு, சிறுவர் பாதுகாப்பு மற்றும் துஸ்பிரயோகம், சிறுவர் தொழில்கள், பால்நிலை சார் வன்முறைகள், துறைசார்ந்து பணியாற்றுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version