அரச விதை உற்பத்தி பண்ணையை கையளிக்கும்  தீர்மானம் இல்லை!

வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை எவருக்கும்  கையளிக்கும்  தீர்மானம் இல்லை என வடக்கு மாகாண ஆளுனர் பி.எம்.எஸ். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

வவுனியா குடிமக்கள் பேரவை வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணையை வேறுதேவைகளுக்கு பயன்படுத்துவதை தடுக்க கோரியும் அவ்வாறு திட்டமிருக்கும் பட்சத்தில் அதனை கைவிடுமாறும் வட மாகாண ஆளுனருக்கு கடிதம் மூலமாக தெரியப்படுத்தியிருந்தது.

இதற்கு பதிலளித்துள்ள உதவி காணி ஆணையாளர் க. சிவப்பிரியா வவுனியா அரச பண்ணையை எவருக்கும் கையளிக்கும் தீர்மானம் இல்லை என வடக்கு ஆளுனர் தெரிவித்துள்ளதாக குடிமக்கள் பேரவைக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

அரச விதை உற்பத்தி பண்ணையை கையளிக்கும்  தீர்மானம் இல்லை!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version