அமெரிக்காவின் உயர் அதிகாரி இலங்கை வருகிறார்!

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

அமெரிக்காவின் சைபர்ஸ்பேஸ் மற்றும் டிஜிட்டல் கொள்கைக்கான தூதுவர் நதானியேல் சிஃபிக் (Nathaniel C. Fick) எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பெங்களூரில் நடைபெறும் ஜி-20 டிஜிட்டல் பொருளாதார அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக இந்தியா வரும் அவர், இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஃபிக்கின் இலங்கை விஜயத்தின் போது, ​​அரசாங்க மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளுடன் இணைய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை பரிமாறிக் கொள்வார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 23 வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர், தகவல் மற்றும் தகவல் தொடர்பு பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் சுதந்திரம் குறித்து பல விரிவுரைகளை வழங்க உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version