ஆண்களே மாரடைப்பு பிரச்சினைகளை அதிகமாக எதிர்கொள்கின்றனர்!

30 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என உடலியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டிலிருந்து இந்த வயதினருக்கு மாரடைப்பு படிப்படியாக அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவர்களில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டதாகவும், சில மருத்துவமனைகளுக்கு மாதந்தோறும் 10 முதல் 15 மாரடைப்பு நோயாளிகள் வருவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு வருகை தருபவர்களில் 90 வீதமானவர்கள் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான உணவு முறையின்மை, உடற்பயிற்சியின்மை, புகைபிடித்தல் மற்றும் போதைப்பொருள் பாவனை, மன உளைச்சல் போன்ற காரணங்களால் மாரடைப்பு ஏற்படுவதாக வைத்தியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எவ்வாறாயினும், மாரடைப்பு நோயாளிகளின் அதிகரிப்புக்கு ஒரு குறிப்பிட்ட காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என்று உடல் நோயியல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version