யாழ்ப்பாணம்-வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார்.
டிப்பர் வாகனம் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகன டயர்களில் சிக்கிக்கொண்டுள்ளது.
இதன்போது கொற்றாவத்தை பகுதியைச் சேர்ந்த சாகித்தியன் என்ற சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், அஜந்தன் என்ற 21 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.