யாழில் திடீர் சுகவீனமடைந்த இளைஞன் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் ஆணைக்கோட்டை பகுதியில் ஊசி மூலம் ஹெரோயின் எடுத்துக்கொண்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகவீனம் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று (28.09) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

குறித்த இளைஞரை பரிசோதனை செய்த வைத்தியர்கள், கிருமி தொற்று காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதேவேளை அண்மைக்காலமாக போதைப்பொருட்களின் பாவனை கணிசமான அளவு அதிகரித்துள்ளது. பாடசாலைகளை குறிவைத்தும் போதைப் பொருள் வியாபாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதனை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version