அம்பலாங்கொட பகுதியில் துப்பாக்கிச்சூடு!


அம்பலாங்கொட தர்மசோகா கல்லூரிக்கு அருகில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இன்று (31.08) பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகள் வேனில் பயணித்த ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பலத்த காயமடைந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் தெரியவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version