சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் : நீதிமன்ற உத்தரவு!

யாழ்ப்பாணத்தில் 8 வயது சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்படும் தாதியருக்கு யாழ். நீதவான் நீதிமன்றம் பயண தடை விதித்துள்ளது.

இந்த விவகாரம் பூதாகாரமாக மாறியுள்ள நிலையில், இது குறித்து பெற்றோர் யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் குறித்த வழக்கு இன்று (07.09) யாழ் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பெற்றோர் சார்பில் முன்னிலையான சட்டதரணி, சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் தாதி வெளிநாட்டிற்கு செல்லாத வகையில் பயணத்தடை விதிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

பெற்றோரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் தாதிக்கு பயணத்தடை விதித்து உத்தரவு பிறப்பித்ததுடன், வழக்கு விசாரணையை எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version