ரக்பி உலகக்கிண்ணம் ஆரம்பம்

ரக்பி உலகக்கிண்ணம் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 12.30 இற்கு பிரான்சில் ஆரம்பமாகியுள்ளது. உலகில் பலரும் ரசிக்கும் முன்னணி விளையாட்டுக்களில் ஒன்றாக இது காணப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு ரக்பி உலகக்கிண்ணம் ஆரம்பிக்கப்பட்டது.

தென்னாபிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் தலா மூன்று தடவைகள் உலகக்கிண்ணத்தை வெற்றி பெற்றுள்ளன. நடப்பு சம்பியனாக தென்னாபிரிக்க அணி களமிறங்கியுள்ளது.

பத்தாவது உலகக்கிண்ணத்தை நடத்தும் பிரான்ஸ் அணி நியூசிலாந்து அணியுடன் முதற் போட்டியில் மோதியது. இந்தப் போட்டியில் 27-13 என பிரான்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

பிரான்ஸ் அணி மூன்று தடவைகள் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இருப்பினும் வெற்றி பெற்றதில்லை. இம்முறை பலமான நியூசிலாந்து அணிக்கெதிராக வெற்றி பெற்றுள்ளது பிரான்ஸ் அணி இறுதிப் போட்டி வரை செல்லுமென்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version