ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகும் யுபுன்!

இலங்கையின் தடகள வீரர் யுபுன் அபேகோன், எதிர்வரும் செப்டம்பர் 23ம் திகதி சீனாவில் ஆரம்பிக்கவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

அண்மையில் அவர் பங்குபற்றிய போட்டியொன்றில் அவருக்கு ஏற்பட்ட உபாதை காரணமாகவே, இந்த போட்டிகளில் இருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும், சர்வதேச அரங்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்த நான் எதிர்பார்த்து காத்திருந்ததாகவும், எனினும் தமது உபாதை இதுவரையில் குணமாகாத காரணத்தினால், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற தமக்கு முடியாமல் போனதில் மிகவும் வருத்தமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்கால போட்டிகளில் சிறப்பாக போட்டியிட தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version