உரிமையாளரை கொன்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்!

கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புர பகுதியில் உள்ள மூன்று மாடி வீடொன்றின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த தனியார் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் வீட்டின் உரிமையாளரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இந்த தாக்குதலில் 56 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இன்று (16.09) அதிகாலை 5 மணியளவில் வீட்டின் உரிமையாளரை வீட்டுக்கு வெளியே வரவழைத்து கொலைச் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு உத்தியோகத்தர் உரிமையாளரை தாக்கிவிட்டு மகாவலி ஆற்றில் குதிக்க முயன்றபோது அப்பகுதி மக்கள் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

உயிரிழந்தவரின் மனைவி வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதாகவும், உயிரிழந்தவர் அந்த வீட்டில் தனியாக வசித்து வருவதாகவும் மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் முறுத்தலாவ பகுதியை சேர்ந்த 33 வயதுடைய ஒருவர் என தெரியவந்துள்ளதுடன், கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகாத நிலையில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
Facebook
Twitter
Reddit
Linkedin
Pinterest
MeWe
Mix
Whatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version