‘திலீபன்’ நினைவேந்தலை தடுக்க முடியாது – நீதிமன்றம் அதிரடி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளியான திலீபனின் 36வது நினைவேந்தலைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் விடுதிருந்த கோரிக்கையை வவுனியா நீதவான் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

திலீபனின் நினைவேந்தல் நிகழ்வானது இன்று (20.09) வவுனியா நகருக்குள் வாகன பேரணியுடன் இடம்பெற்றால் அமைதியின்மை ஏற்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், இறந்தவர்களை நினைவுகூர எவருக்கும் உரிமை உண்டு, ஆனால் சட்டம் ஒழுங்கை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version