அக்டோபர் முதல் பாடசாலைகளில் புதிய திட்டம்!

ஒக்டோபர் மாதம் பாடசாலை சுகாதார மேம்பாட்டு மாதமாக செயற்படுத்த தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (26.09) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைக் தெரிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 02ம் திகதி முதல் 31ம் திகதி வரையான காலப்பகுதியில் வாரத்திற்கு ஒரு கருப்பொருளை தெரிவு செய்து பாடசாலைகளில் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version