வாகன உதிரிபாகங்கள் தொடர்பில் புதிய தகவல்!

முதலீட்டுச் சபையில் பதிவுசெய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு மட்டுமே வரியின்றி வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் நாட்டுக்கு பாரிய வரி இழப்பு ஏற்படும் என அதன் தலைவர் இந்திக்க சம்பத் மிரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலை பாரிய சிக்கலுக்கு வழிசமைக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version