சுனாமியால் கைவிடப்பட்ட வீடுகளில் சமூக விரோத செயற்பாடுகள்!

அம்பாறை – கல்முனை மாநகர சபைக்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியில் சுனாமி அனர்த்தம் காரணமாக  முழு அளவில் பாதிக்கப்பட்ட வீடுகளில் சமூக சீர்கேடுகள் இடம்பெறுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.  

வீடுகளில் உள்ள அறைகளில் அரைகுறையாக ஆண்கள்,  பெண்களின் உள்ளாடைகள் சிதறி காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. 

வெளியிடங்களில் இருந்து வருகின்ற சிலர் சட்டவிரோத செயற்பாடுகள் போதைப்பொருள் பாவனை, பாலியல் செயற்பாடுகளுக்கு குறித்த வீடுகளை பயன்படுத்தி வருவதாக பிரதேசவாசிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் இந்த வீடுகள் குறித்து கவனம் செலுத்தி உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றம் மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version