உணவு பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

அண்மையில் அதிகரிக்கப்பட்ட எரிவாயு விலை திருத்தத்திற்கு ஏற்ப மூன்று உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவாக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி, இன்று (05.10) முதல் அமுலாகும் வகையில் தேநீரின் விலை – 10 ரூபாவினாலும், கொத்து ரொட்டியின் விலை – 20 ரூபாவினாலும், சாப்பாட்டு பொதி ஒன்றின் விலை – 50 ரூபாவினாலும், அதிகரிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version