கொழும்பில் 15 மணி நேர நீர் விநியோக தடை!

கொழும்பின் பல பகுதிகளுக்கு நாளை (07.10) 15 மணித்தியால நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய மேம்பாட்டுப் பணிகள் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாளை (07.10) மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் (08.10) காலை 8 மணி வரை நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 11,12,13, 14 மற்றும் கொழும்பு 15 ஆகிய பகுதிகளுக்கே இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version