பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் மேற்கொண்ட மஹிந்த ராஜபக்க்ஷ!

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், பலஸ்தீன மக்களுக்கு ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (16.10) கொழும்பில் உள்ள பலஸ்தீன தூதரகத்திற்கு விஜயம் செய்தார்.

பாலஸ்தீன தூதருடனான கலந்துரையாடலின் போது, முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ, உலகில் எங்கும் எப்போதும் பயங்கரவாதத்திற்கு இடமில்லை என்றும், எந்தவொரு பிரச்சனைக்கும் போர் தீர்வாக அமையாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

போரினால் இலங்கை எதிர்கொண்ட கடந்த கால வடுக்களை நினைவுபடுத்திய அவர், அமைதியின் அவசரத்தை வலியுறுத்தியுள்ளதுடன், போரை நிறுத்த முயற்சிக்குமாறும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version