”தாக்குதல் தொடர்பில் எனக்குத் தெரிவிக்கவில்லை” – ரணில்

சிரியாவில் ISIS பயிற்சி பெற்ற முஸ்லிம் இளைஞர்கள் எவரும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பங்குகொள்ளவில்லை என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் போதே ரணில் இன்று (11/11) இவ்வாறு தெரிவித்தார்.

மேலும், ‘தாக்குதல் நேரத்தில் பாதுகாப்பு அமைச்சில் தாக்குதல் பற்றி விவாதிக்கப்பட்டாலும், வரவிருக்கும் தாக்குதல்கள் குறித்த முன்னெச்சரிக்கைகள் எனக்கு ஒருபோதும் தெரிவிக்கப்படவில்லை’ என அவர் கூறினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version