‘ஷி யான் 6’ சீன கப்பல் இலங்கையில்!

இலங்கைக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ள சீனக் கப்பல் “ஷி யான் 6” இன்று (25.10) கொழும்பு துறைமுகத்தில் தரித்து நிற்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாததிலேயே இக்கப்பல் நாட்டிற்கு வர அனுமதிக்கப்பட்டதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், “ஷி யான் 6” கப்பலுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அனுமதி கிடைக்கப்பெற்றதையடுத்து, இன்று இலங்கை கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்படவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version