அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்தியவரைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.