கம்பஹா மாவட்டத்தில் அதிகரிக்கும் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை!

கம்பஹா மாவட்டத்தில் அதிக தொழுநோயாளர்கள் அடையாளங்காணப்படுவதால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவு மற்றும் கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் இந்திக வன்னிநாயக்க ஆகியோரினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பிரகாரம் கம்பஹா மாவட்டத்தில் இவ்வருடத்தில் இதுவரை சுமார் 130 தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக மாவட்ட தொற்றுநோய் நிபுணர் வைத்தியர் நிலங்கி சுபசேகர தெரிவித்துள்ளார்.

தொழுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து முறையான மருத்துவ சிகிச்சையைப் பெறுவதன் மூலம் குணப்படுத்த முடியும் எனவும், தோல் உணர்வின்மை மற்றும் புண்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், தோல் மருத்துவமனையில் தேவையான சிகிச்சையைப் பெற வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழுநோய்க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது எலும்பியல் சிக்கல் நிலைக்கு வழிவகுக்கும் என்றும், ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறுவது மிகவும் முக்கியம் என்றும் முறையான சிகிச்சையால் தொழுநோயைக் குணப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version