போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிக்க சிறப்பு சமூக புலனாய்வு பிரிவு!

போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து பாடசாலை மாணவர்களை பாதுகாப்பதற்காக தேசிய கெடட் படையின் தலைமையில் சமூக புலனாய்வு பிரிவொன்றை ஸ்தாபிக்க திட்டமிட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

மேலும், திறமையான சிறுவர்கள் மற்றும் கேடட் படையினரின் செயற்பாடுகள் நவீன தொழில்நுட்ப முறைகளின் ஊடாக பிரபலப்படுத்தப்பட்டு ஊக்குவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கெடட் சம்பியன்ஷிப் விழாவில் கலந்துகொண்டபோதே அவர் இதனை தெரிவித்தார். கொழும்பு ஆனந்த கல்லூரி மற்றும் கண்டி மகளிர் உயர்தரப் பாடசாலையின் கெடட் அணிகளான ஹெர்மன் லூஸ் மற்றும் த சொய்சா ஆகியோர் சம்பியன்ஷிப்பை வென்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்களும் விருதுகளும் வழங்கப்பட்டன.

மத குருமார்கள் மற்றும் அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version