பிரதான புகையிரத மார்க்கத்தில் பாதிப்பு

பிரதான புகையிரத பாதையின் விஜய ரஜதஹன மற்றும் மீரிகம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாதையில் ஒரு பகுதி வெள்ளம் காரணமாக தாழிறங்கியுள்ளதால் அப்பாதையூடான புகையிரத போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனால் அப்பாதையூடாக இடம்பெறும் வழைமையான புகையிரத சேவைகள் இன்றையதினம் (15/11) இயங்காது என்றும், 10 சேவைகள் மாத்திரமே முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை புகையிரத சேவைகள் பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த பாதை தடையினூடாககொழும்பு – கோட்டைக்கு 3 புகையிரதங்களும், வியாங்கொடையிலிருந்து 3 புகையிரதங்களும், கம்பஹாவிலிருந்து ஒரு புகையிரதமும், ராகமையிலிருந்து 2 புகையிரத சேவைகளும் முன்னெடுக்கப்படும் என அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.

கம்பஹாவுக்கு மேல் ஒரு புகையிரத சேவையும் முன்னெடுக்கப்படாத நிலையில்,மிக முக்கியமாக வட மாகாணம், கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் முற்றிலுமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

பிரதான புகையிரத மார்க்கத்தில் பாதிப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version