நாளை (09.12) மாலை 5.00 மணி முதல் மறுநாள் (10.12) காலை 9.00 மணி வரையான 16 மணித்தியாலங்களுக்கு கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய ஐந்து பிரதேசங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் எனவும் நீர் வழங்கல் சபை தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாகவே இந்த நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .