ஆர்ப்பாட்டத்திற்கு 5 நீதிமன்றங்கள் தடை உத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தி நாளை நடத்த தீர்மானித்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு தடையுத்தரவு கோரி பொலிஸார் விண்ணப்பித்த மனுவை சில நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன.

அதன்படி புதுக்கடை நீதவான் நீதிமன்றம், 1ஆம் 2ஆம் இலக்க மஹர நீதவான் நீதிமன்றம், கடுவலை மற்றும் ஹோமாகம நீதவான் நீதிமன்றங்கள் இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியினரின் ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்துள்ளன.

எனினும், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பொலிஸாரின் கோரிக்கையை நிராகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹல் தல்துவ தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்திற்கு 5 நீதிமன்றங்கள் தடை உத்தரவு
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version