வெடிசம்பவத்தில் இருவர் காயம்

அலவ்வ – பன்கொல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றில் இன்று (15/11) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இரு பெண்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த இருவரும் அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த வெடி விபத்தின் காரணமாக வீட்டின் ஒரு பகுதி முழுவதும் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் வெடிவிபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பில் போயவலனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த வீட்டின் உரிமையாளர், முன்னர் கல்குவாரி ஒன்றை நடத்தி வந்ததாக முதல் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வெடிசம்பவத்தில் இருவர் காயம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version