கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு..!

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று காலை 08 மணி முதல் மாலை 04 மணி வரை குறித்த அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியின் அசமந்தப்போக்கு தொடர்பில் வைத்தியசாலை பணிப்பாளரும் சுகாதார அமைச்சும் உரிய முறையில் பதிலளிக்கத் தவறியமையினால் வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், அவசர சிகிச்சைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர், வைத்தியர் சமில் விஜேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version