சீரற்ற வானிலை காரணமாக வட மாகாணத்தில் 16 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் 8 பாடசாலைகளும் வவுனியாவில் ஒரு பாடசாலையும் முல்லைத்தீவில் 7 பாடசாலைகளும் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வானிலை சீரானதன் பின்னர் பாடசாலைகள் மீள திறக்கப்படும் என வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.