உலக வங்கியிடமிருந்து மேலும் 250 மில்லியன் நிதியுதவி..!

இலங்கைக்கான 2ம் தவணை நிதியுதவியாக உலக வங்கி மேலும் 250 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவித்துள்ளது.

அரசாங்கத்தின் வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு கடந்த ஜூன் மாதம் உலக வங்கி அனுமதி வழங்கியது.

நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையினை மீட்டெடுப்பதற்கும், வரிய மற்றும் பாதிக்கப்பட கூடியவர்கள் மீதான தாக்கங்களை தணிப்பதற்காகவும் இந்த நிதியுதவி வழங்கப்படுகின்றது.

குறித்த நிதியுதவியின் கீழ் கடந்த ஜூன் மாதம், 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதல் தவணையாக உலக வங்கியினால் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version