மின்சார சபை ஊழியர்களுக்கான கவலைச் செய்தி..!

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் இந்த வருடத்திற்கான ஊக்குவிப்பு கொடுப்பனவை வழங்காதிருக்க தீர்மானித்துள்ளதாக மின்சக்தி வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின், தலைவர் உள்ளிட்ட பிரதானிகளுக்கு குறித்த தீர்மானம் தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை 2025ஆம் ஆண்டு முதல் 3 வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் 25 சதவீத கொடுப்பனவு அதிகரிப்பை தொடராதிருப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மின் சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் நிர்வாகம் மற்றும் செயற்பாட்டு செலவினத்தை குறைக்கும் நோக்கில், கடந்த வருடங்களிலும் ஊக்குவிப்பு கொடுப்பனவு வழங்கப்படாதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version