இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை..!

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுகின்றமை தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின்; தனது கவலையையும் வெளியிட்டுள்ளார்.

நாகப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த 13 ஆம் திகதியன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 10 பேரையும், 18ஆம் திகதியன்று 18 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள கடற்றொழிலாளர்களை விடுவிக்கவேண்டும் என்பதுடன், அனைத்து படகுகளையும் விடுவிக்க தெளிவான காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டுமென்றும் ஸ்டாலின் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version