தொலைபேசிகளின் பாவனை குறைவு..!

கடந்த வருடத்தை விட நாட்டில் பயன்படுத்தப்படும் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள நிதி முகாமைத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட உபகரணங்களுக்கு பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டுள்ள நிலையில், கையடக்கத் தொலைபேசி ஒன்றின் விலை சுமார் 15000 ரூபாவினால் அதிகரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் இணைய இணைப்புகள் உட்பட இணைய சந்தாதாரர்களின் எண்ணிக்கை 1.0 வீதம் குறைவடைந்து 21.9 மில்லியனாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version