நாடளாவிய ரீதியில் சின்னமுத்து தடுப்பூசி திட்டம் அமுல்..!

நாடளாவிய ரீதியில் 09 மாதங்கள் முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கான சின்னமுத்து தடுப்பூசி திட்டம் இன்று மற்றும் நாளை அமுல்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை சின்னமுத்து தடுப்பூசி பெறாத குழந்தைகளுக்கு ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக நடைபெற்ற சின்னமுத்து நோய்த்தடுப்பு திட்டத்தை மேலும் செயw;படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version