வாகன விபத்துக்களில் நால்வர் உயிரிழப்பு..!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டின் பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

மாத்தறை – ஹக்மன வீதியின் யட்டியன பிரதேசத்தில் லொறி ஒன்று முச்சக்கர வண்டியுடன் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சௌசிறி உயன – யடிவன பகுதியை சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரண கெஸ்பேவ வீதியில் வீதியைக் கடக்க முயற்பட்ட பெண் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

கங்கொடவில – நுகேகொட பகுதியைச் சேர்ந்த 85 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, கெபிதிகொல்லேவ – வவுனியா வீதியின் துட்டுவெவ பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, எலபாத்த – கொடாமுல்ல சந்திக்கு அருகில் கெப் வண்டியொன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில்; நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

இரத்தினபுரி, உடனிரிஹல்ல பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version