யுக்திய நடவடிக்கையை நிறுத்துமாறு கோரிக்கை..!

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையை நிறுத்தி அதனை மறுபரிசீலனை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை இந்த கோரிக்கையினை விடுத்துள்ளது.

சுகாதாரம், மனித உரிமைகள் போன்ற விடயங்களில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கையில் இராணுவத்தின் வலுவான அணுகுமுறை காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Social Share

Leave a Reply