கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிப்பு..!

கடவுச்சீட்டு கட்டணம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் இன்று (01.02) முதல் அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடவுச்சீட்டு விண்ணப்பங்களுக்கான கட்டணம் 5,000 ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன் புதிய விலை 10,000 ரூபாவாக அறவிடப்படவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version