தொடர்ச்சியாக சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள்..!

சட்ட விரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்போது, கடற்படையினரால் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதையடுத்து மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய மேலும் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version