சமூக விஞ்ஞானப் போட்டியில் தேசிய மட்டத்தில் சாதனை படைத்த மாணவிகளுக்கு கெளரவிப்பு!

சமூக விஞ்ஞானப் போட்டியில் கிழக்கு மாகாண மட்டத்தில் வெற்றியீட்டி தேசிய மட்டப் போட்டியில் கலந்து கொண்டு நான்காம் மற்றும் ஏழாம் இடங்களைப் பெற்று வெற்றியீட்டிய மீராபாலிகா தேசிய பாடசாலை மாணவிகள் கெளரவிக்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

ஆண்டு 11 இல் கல்வி பயிலும் சைபுதீன் லீனத் அசா தேசிய மட்டத்தில் நான்காம் இடத்தையும் ஆண்டு 7 இல் கல்வி பயிலும் கலீம் சகீனத் தேசிய மட்டத்தில் 7 ஆம் இடத்தினையும் பெற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கு பாடசாலையின் அதிபர் யு.எல்.மன்சூர், பிரதி அதிபர் திருமதி பிரதீபனால் ஆகியோரின் மாணவர்களுக்கு கெளரவம் வழங்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் தேசிய மட்டத்தில் ஒன்று தொடக்கம் பத்து வரையான வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version