லொரென்சோ புதா – 4 கப்பலில் இருந்த மீனவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை

பியல் நிசாந்தமீன்பிடித் தொழிலுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன செயற்பாட்டு முறைகளுடன் கூடிய புதிய ஆழ்கடல் கப்பலை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

லொரென்சோ புதா – 4 கப்பலில் இருந்த மீனவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சட்டமா அதிபர் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும், கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிசாந்த டி சில்வா இவ்வாறு கருத்து தெரிவித்தார்

“மீன்பிடி தொழில்துறையின் வளர்ச்சிக்காக, மீன்களின் தரத்தை பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் மீன்பிடி உபகரணங்களின் விலை அதிகரிப்பு காரணமாக மீனவர்களின் வருமானத்தில் ஓரளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் நிலைமையை தணிப்பதற் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.மேலும், உலக உணவு அமைப்பு பல முன்னோடி திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு புதிய OFRP கப்பல் அறிமுகத்தின் கீழ், உலக உணவு அமைப்பு மற்றும் காலநிலை மாற்றம் மற்றும் மாற்று தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்துடன் இணைந்து,மாறும் காலத்திற்கு ஏற்றவாறு ஒரு புதிய கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது.சோலார் தொழில்நுட்பம் கொண்ட இயந்திர படகுகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பொறுப்பு வாய்ந்த நிறுவனங்களுடன் எமது அமைச்சு கலந்துரையாடியுள்ளது.மேலும், அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஆதரவின் கீழ், இந்த நாட்டில் ஆழ்கடல் மீன்பிடி கப்பல்களுக்கு கப்பல் கண்காணிப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவரை, 2350 ஆழ்கடல் மீன்பிடிக் கப்பல்களில் இந்த அமைப்பு நிறுவப்பட்டுள்ளது, அடுத்த ஆண்டு முதல் காலாண்டு இறுதிக்குள், 4200 கப்பல்களிலும் கப்பல் கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்படும்.கப்பல் கண்காணிப்புத் தரவுகளைப் பயன்படுத்தி மீன்பிடித் தளங்களை முன்னறிவிப்பதும் தற்போது ஆராய்ச்சி மட்டத்தில் செய்யப்படுகிறது. இது தொடர்பான பகுப்பாய்வு மென்பொருள் தயாரிப்புப் பணிகள் தற்போது முடிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் கப்பல் கண்காணிப்பு அமைப்பு முழுமையாக செயல்படும். மேலும், மீன்பிடி சட்டத்தை மறுசீரமைத்து,1996-ம் ஆண்டு நடைமுறையில் இருந்த மீன்பிடி சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்போது காலத்துக்கேற்ற மாற்றங்களில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பதைக் கூற வேண்டும். சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பில் கடுமையான சட்டம் இயற்றவும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன், இராஜதந்திர மட்டத்தில் நாடுகளுக்கிடையிலான கலந்துரையாடல்களை மேற்கொண்டு மீன்பிடித் தொழில் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான விரிவான திட்டமொன்றை உருவாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அத்துடன், லொரென்சோ புதா – 4 கப்பல் தொடர்பில் கடற்றொழில் திணைக்களம், கடற்படை மற்றும் வெளிவிவகார அமைச்சு ஆகியோர் கலந்துரையாடியுள்ளன.சட்ட நடவடிக்கைகள் சீஷெல்ஸ் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகின்றன.சீஷெல்ஸ் நாட்டில் சட்ட நடவடிக்கைகளை முடித்து மீனவர்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சட்டமா அதிபர் ஊடாக வெளிவிவகார அமைச்சுக்கு அறிவித்துள்ளார்”

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version