சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளபடவுள்ளது.
மேலும், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு எதிர்வரும் 20 ஆம் திகதி மாலை 4.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.