குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டம் தொடர்பில் தீர்மானம்!

2024 ஆம் ஆண்டிலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்க வேலைத்திட்டத்தை தொடர்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில், சமுர்த்தி பயனாளிகள் உட்பட 25 மாவட்டங்களில் உள்ள 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு இரண்டு மாதங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு 10 கிலோ நாட்டு அரிசி வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது போல, அடையாளம் காணப்பட்ட குறைந்த வருமானம் பெறுபவர்களின் ஊட்டச்சத்து மட்டத்தை பராமரிக்க உதவும் வகையில், இந்த ஆண்டும் அதே திட்டத்தை செயல்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறைந்த வருமானம் பெறும் சுமார் 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி வழங்குவதற்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version